search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் வேலை இல்லாதவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
    X

    குமரியில் வேலை இல்லாதவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

    • வேலை வாய்ப்பு அதிகாரி தகவல்
    • 10 ஆண்டுகள் தொடர்ந்து பெற வேண்டுமானால் சுயஉறுதி மொழி ஆவணத்தை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி ஜெரிபா ஜி.இம்மானுவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    குமரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர் மற்றும் அதற்கு மேலும் உள்ள கல்வித்தகு தியை பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்தல் செய்து வரும் பதிவுதாரர்க ளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 1-10-2023 முதல் 31-12-2023 வரையிலான காலத்திற்கு உதவித்தொகை வழங்குவதற்கான ந டவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    உதவித்தொகை பெற வேலைவாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்து 30-9-2023 தேதியில் 5 ஆண்டுகள் நிறைவு செய்திருத்தல் வேண்டும். 31-12-2023 அன்று உச்ச வயது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினருக்கு 45 வயதுக்குள்ளும், மற்ற அனைத்து பிரிவினர்களுக்கு 40 வயதுக்குள்ளும் முடிவடையாமல் இருக்க வேண்டும். உதவித்தொகை பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகைப்படா மல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை பதிவு செய்து 30-9-2023 தேதியில் ஒரு ஆண்டு முடிவுற்றி ருந்தால் போதுமானது. மேலும் மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு வயது வரம்பு மற்றும் வருமான உச்சவரம்பு ஏதுமில்லை.

    பொதுப்பிரிவு பதிவு தாரர்களைப் பொறுத்த வரை பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சி பெறாத வர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.200-ம், பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம், பிளஸ்-2 தேர்ச்சிக்கு ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு ரூ.600-ம், மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை பள்ளியிறுதி வகுப்பிற்கு கீழ் மற்றும் பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சிக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.600-ம், பிளஸ்-2 தேர்ச்சிக்கு ரூ. 750-ம், பட்டதாரிகளுக்கு ஆயிரமும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

    பள்ளிக்கல்வி, கல்லூரிக்கல்வி மற்றும் தொழில் சார்ந்த கல்வி பயின்று வரும் பதிவுதாரர்களுக்கும், பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப்படிப்புகள் படித்த பதிவுதாரர்களுக்கும் வேலை வாய்ப்பற்றோர் நிவாரணம் பெற இயலாது.

    தகுதி மற்றும் விருப்பமுடைய பதிவுதாரர்கள் தங்களது அசல் கல்விச் சான்றிதழ், மாற்றுக் கல்விச் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டையுடன் மாவட்ட வேலைவாயப்பு அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் வந்து உதவித் தொகைக்கான விண்ணப்ப படிவம் பெற்றுக் கொள்ளலாம்.

    இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்கள் மற்றும் பெற்றுக் கொண்டிருக்கும் பயனாளிகள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. 3 ஆண்டுகளுக்கு குறைவாக இத்திட்டத்தின் கீழ் உதவித் தொகையை பெற்று வரும் பயனாளிகள் இந்த உதவித் தொகையினை தொடர்ந்து பெற வேண்டுமானால் (மாற்றுத் திறனாளிகள் பொறுத்தவரையில் 10 ஆண்டுகள் தொடர்ந்து பெற வேண்டுமானால் சுயஉறுதி மொழி ஆவணத்தை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×