search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் சாலை விதிகளை கடை பிடிக்காத வாகனங்களுக்கு அபராதம்
    X

    குமரி மாவட்டத்தில் சாலை விதிகளை கடை பிடிக்காத வாகனங்களுக்கு அபராதம்

    • போக்குவரத்து மாற்றி விடப்பட்டதையடுத்து செட்டிகுளம், வேப்பமூடு, வடசேரி பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது
    • ஒரு வழி பாதையில் வந்த 50 ஆட்டோக்களை தடுத்து நிறுத்தி தலா ரூ.600 அபராதம் விதித்தனர்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகரில் பிரதான சாலையாக கருதப் படும் வேப்பமூடு-டதி பள்ளி சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வரு கிறது.

    இதையடுத்து அந்த சாலையில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றி விடப்பட்டதையடுத்து செட்டிகுளம், வேப்பமூடு, வடசேரி பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெருக்கடியை குறைக்க போக்குவரத்து போலீ சார் பல்வேறு அதிரடி நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறார்கள். இருப்பினும் வாகன ஓட்டிகள் மீனாட்சிபுரம் சாலை, வேப்பமூடு பகுதி களில் ஒரு வழிச்சாலையில் அத்துமீறி சென்று வரு கிறார்கள். ஒரு வழி பாதை யில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவ டிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது.

    போக்குவரத்து இன்ஸ் பெக்டர் அருண் தலைமை யிலான போலீசார் வேப்பமூடு, மணிமேடை, செட்டிகுளம் சந்திப்பு, கோட்டார் பகுதி களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஒரு வழி பாதையில் வந்த 50 ஆட்டோக்களை தடுத்து நிறுத்தி தலா ரூ.600 அபரா தம் விதித்தனர். இன்று காலையில் அபராதம் விதிக் கும் பணியில் போக்கு வரத்து போலீசார் ஈடுபட்ட னர்.

    வேப்பமூடு பகுதியில் நடந்த சோதனையின் போது இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று பேர்கள் வந்தவர்களும் சிக்கினார்கள். மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வந்த பெண்கள் பலரும் இந்த சோதனையில் சிக்கி தவித்தனர். அவர்க ளுக்கும் அபராதம் விதிக்கப் பட்டது. இதே போல் மாவட்டம் முழுவதும் சாலை விதிகளை கடைபிடிக்காத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×