என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில் அருகே உண்டியல் கொள்ளையில் ஈடுபட்ட மேலும் ஒரு கொள்ளையன் கைது
- கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
- 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒரு உண்டியல் கொள்ளையனை போலீசார் கைது
நாகர்கோவில் :
நாகர்கோவில் அருகே கரியமாணிக்கபுரம் பகுதியில் கன்னி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கதவை உடைத்து அங்கிருந்த உண்டி யல் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர். இது குறித்து கோவில் நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மர்மநபர் ஒருவர் கோவிலை உடைப் பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பப்பது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக சந்தேகப்படும்படியாக நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். பின்னர் அவர் கோவிலில் உண்டியல் திருடியதை ஒப்புக்கொண் டார்.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் மயிலாடி அமராவதிவிளை பகுதியை சேர்ந்த மரிய சேவியர் (வயது 32) என்பது தெரியவந்தது. இவரை போலீசார் கோர்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
மரிய சேவியர் மீது ஏற்கனவே அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுசீந்திரம் மற்றும் ராஜாக்கமங்கலம் பகுதியில் உண்டியல் கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒரு உண்டியல் கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்