search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4-ம் நாள் திருவிழாவையொட்டி வெள்ளி காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் வீதி உலா
    X

    4-ம் நாள் திருவிழாவையொட்டி வெள்ளி காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் வீதி உலா

    • பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து “திருக்க ணம்”சாத்தி வழிபட்டனர்.
    • அம்மனுக்கு தங்க கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 24-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, இன்னிசை கச்சேரி, பக்தி சொற்பொழிவு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    4-ம் திருவிழாவான நேற்று பல வண்ண மலர்களால் அலங்க ரிக்கப்பட்ட வெள்ளி காம தேனு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. நள்ளிரவு வரை வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்க ணம்"சாத்தி வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    5-வது நாளான இன்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. காலை 11 மணிக்கு அம்மனுக்கு தங்க கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது.

    Next Story
    ×