search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் 27-ந்தேதி 11907 பேர் போலீஸ் எழுத்து தேர்வு எழுதுகிறார்கள்
    X

    தமிழ் நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 

    குமரி மாவட்டத்தில் 27-ந்தேதி 11907 பேர் போலீஸ் எழுத்து தேர்வு எழுதுகிறார்கள்

    • 10 மையங்களில் நடக்கிறது
    • விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்-04652 220167 ஆகும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    2022-க்கான 3,552 இரண் டாம் நிலை காவலர் ஆண் மற் றும் பெண் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) இரண்டாம் நிலை சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வுக்கான அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

    எழுத்து தேர்வு வரும் நவம் பர் 27-ந்தேதி தமிழ் மொழி தகுதி தேர்வு, முதன்மை எழுத்து தேர்வு நடக்கிறது. அன்று காலை 8.30 மணிக்கு தேர்வு நடைபெறும் மையத்திற்கு அனைவரும் வர வேண்டும். தேர்வு நேரம் காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 12.40 மணி வரை நடைபெறும். குமரி மாவட்டத்தில் 10 மையங்களில் தேர்வுகள் நடக் கிறது. ஆரல்வாய்மொழி ஜெய மாதா பொறியியல் கல்லூரி யில் 1000 பேரும், தோவாளை லயோலா பொறியியல் கல்லூரியில் 1100, தோவாளை சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் 1000, ஆரல்வாய்மொழி டிஎம்ஐ கல் லூரியில் 800, அஞ்சுகிராமம் ரோகிணி பொறியியல் கல்லூரியில் 1000, சுங்கான்கடை புனித சேவியர் பொறியியல் கல்லூரியில் 1000, நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ் தவ கல்லூரியில் 1000, நாவல்காடு ஜேம்ஸ் பொறியியல் கல்லூரியில் 1500, இறச்சகுளம் அமிர்தா பொறி யியல் கல்லூரியில் 1711, பார்வதிபு ரம் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூ ரியில் 1756 என்று மொத்தம் 11 ஆயிரத்து 907 பேர் தேர் எழுத நுழைவு சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.

    தேர்வு எழுதுபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. காலை 8.30 மணி முதல் 10 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 10 மணிக்கு மேல் வருப வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதா ரர் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு மையத்தினை மாற்றம் ஏதும் செய்ய இயலாது.

    தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை கொண்டுவராத தேர்வு மையத்திற்குள் விண்ணப்பதாரர் அனுமதிக்கப்படமாட்டாது. விண்ணப்பதாரர் புகைப்ப டத்துடன் கூடிய வேறு அடையாள அட்டையினை கொண்டு வருவது உகந்தது. செல்போன், கால்குலேட்டர் மற்றும் பிற எலக்ட்ரானிக் உபகரணங்கள் தேர்வு எழுதும் அறைக்குள் கண்டிப் பாக அனுமதிக்கப்பட மாட்டாது.

    எழுத்து தேர்வுக்கு வரும்போது கறுப்பு அல்லது நீல நிற பந்து முனை பேனா கொண்டு வர வேண்டும். பென்சில் கொண்டு வரக் கூடாது. அழைப்புக் கடிதம் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள் தமிழ் நாடு சீருடை பணியா ளர் தேர்வாணைய இணைய தளம் (www.tn.gov.in/tnusrb.com) லிருந்து அழைப்புக் கடித நகல் எடுத்து தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும்.

    இத்தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இல்லாமல் இருந்தாலோ அல்லது தெளிவாக இல்லாமல் இருந்தாலோ விண்ணப்ப தாரர் தங்களது புகைப்ப டத்தினை ஒட்டி அதில் "A" அல்லது "B" பிரிவு அலுவலரிடம் சான்றொப் பம் பெற்று வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்-04652 220167 ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    Next Story
    ×