search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடலாக்குடியில் வீட்டின் முன்பு பிணமாக கிடந்த முதியவர்
    X

    இடலாக்குடியில் வீட்டின் முன்பு பிணமாக கிடந்த முதியவர்

    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
    • கிராம நிர்வாக அதிகாரி வினிசியா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு

    நாகர்கோவில் :

    இடலாக்குடி பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வீட்டின் முன்பு பிணமாக கிடந்தார்.இதை பார்த்த பொதுமக்கள் கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி வினிசியா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×