search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்.கொள்ளை வழக்கில் தலைமறைவாகியுள்ள 4 பேர் கேரளாவில் பதுங்கல்
    X

    நாகர்.கொள்ளை வழக்கில் தலைமறைவாகியுள்ள 4 பேர் கேரளாவில் பதுங்கல்

    • தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை
    • கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வேதநகர் மேலப்புது தெருவை சேர்ந்தவர் முகமது உமர்சாகிப் (வயது 53). இவரது மனைவி ஜாஸ்மின். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த 26-ந் தேதி ஜாஸ்மின் அவரது மகள் மற்றும் மாமியார் ஆஸ்பத்தி ரிக்கு சென்றிருந்தனர். வீட்டில் முகமது உமர் ஷாகிப் மட்டும் தனியாக இருந்தார். அப்போது பர்தா அணிந்து வந்த 7 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து முகமது உமர் சாகிப்பை கட்டி போட்டுவிட்டு பீரோவில் இருந்த 20 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற னர்.

    இதுகுறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முகமது உமர் ஷாகிப் கொடுத்த புகாரின் பேரில் இடலாக்குடி வயல் தெருவை சேர்ந்த அமீர் (47), ரஹீம் (33), அழகிய பாண்டியபுரம் எட்டாம் மடை பகுதியை சேர்ந்த கவுரி (36), சரக்கல்விளையை சேர்ந்த மீரான் (40), கோவில்பட்டியை சேர்ந்த சார்லஸ், இருளப்பபுரத்தை சேர்ந்த ஷேக் முகமது, மைதீன் புகாரி ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக கொள்ளை யர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப் பட்டது. தனிப்படை போலீசார் அமீர், ரஹீம், கவுரி ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் கடனை அடைப்பதற்காகவும், வீட்டு செலவுக்கு பணம் தேவைப் பட்டதால் திருடியதாகவும் கூறினார்கள். கொள்ளை யடிக்க சென்ற முகமது உமர் ஷாகிப் வீட்டில் 100 பவுன் நகை கிடைக்கும் என்று எதிர்பார்த்து சென்றதாகவும் ஆனால் குறைவான அளவில் பணம் கிடைத்ததாகவும் தெரிவித்தனர்.

    இதற்கிடையில் கைது செய்யப்பட்ட கவுரியை தக்கலை ஜெயிலில் அடைத்தனர். ரஹீம் நாகர்கோவில் ஜெயில் அடைக்கப்பட்டார். அமீர் சிகிச்சைக்காக ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட் டுள்ளார். தலைமறைவாகி உள்ள சார்லஸ், மீரான், ஷேக் முகமது, மைதீன் புகாரியை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் தேடுவதை அறிந்த 4 பேரும் தலைமறை வாகிவிட்டனர்.

    நெல்லை, குமரி மாவட்டங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் சிக்க வில்லை. இந்த நிலையில் அவர்கள் கேரளாவில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.

    Next Story
    ×