search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் அருகே குளத்தில் பிணமாக மிதந்த கட்டிட தொழிலாளி சாவில் மர்மம் நீடிப்பு - கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை
    X

    திருவட்டார் அருகே குளத்தில் பிணமாக மிதந்த கட்டிட தொழிலாளி சாவில் மர்மம் நீடிப்பு - கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை

    • கடந்த 6-ந் தேதி அஜின் நண்பர்களுடன் குளத்தில் மீன் பிடிக்கச்சென்றுள்ளார்
    • அவரை பல இடங்களிலும் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே உள்ள குட்டைகுழி புதுக்காடு வெட்டி விளையை சேர்ந்த வர் அய்யப்பன். இவரது இளைய மகன் அஜின் (வயது26).

    கட்டிட தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. அஜினுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது.இவர் காலையில் வேலைக்குப் போய்விட்டு மாலையில் நண்பர்களுடன் அருகில் உள்ள முட்டைக் குளத்தில் மீன் பிடிக்கச் செல்வது வழக்கும்.

    கடந்த 6-ந் தேதி அஜின் நண்பர்களுடன் குளத்தில் மீன் பிடிக்கச்சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களிலும் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் நேற்று முட்டைக்குளத்தில் அஜின் பிணமாக மிதப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது.அவரது அண்ணன் அஜீஸ் மற்றும் நண்பர்கள் அங்கு சென்று பார்த்து இதனை உறுதி செய்தனர். இதுகுறித்து திருவட்டார் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவம் குறித்து திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.அஜின் மது போதையில் தண்ணீரில் விழுந்து மூழ்கி இறந்தாரா? அல்லது நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டு அதில் அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் ஏற்பட்டதா? வேறு யாராவது தாக்கினார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×