என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குலசேகரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் - தொழிலாளி பலி
- அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இவரை மீட்டு மார்த்தாண்டம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- அர்ச்சுனனின் உடல் இன்று குழித்துறை அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது
திருவட்டார் :
குலசேகரம் அருகே திருநந்திக்கரை பகுதியை சேர்ந்தவர் அர்ச்சுனன் (வயது 54). ரப்பர்பால் வெட்டும் தொழில் செய்து வருகிறார் இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும் ஒரு மகளும் மகனும் உள்ளனர் மகளுக்கு திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார்.
நேற்று மாலை அர்ச்சுனன் திருநந்திகரையில் இருந்து குலசேகரம் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் வரும் போது பேச்சிப்பாறை சேனங்கோடு பகுதியை சேர்ந்த விஜோ ஜோசப்பு என்ற பள்ளி மாணவன் தனது இரு சக்கர வாகனத்தில் குலசேகரத்தில் இருந்து பேச்சிப்பாறை நோக்கி வந்தான். இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராத விதமாக மோதிக் கொண்டன.
இதில் அர்ச்சுனன் தூக்கி வீசப்பட்டார். உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இவரை மீட்டு மார்த்தாண்டம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவ மனக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று இரவு அர்ச்சுனன் இறந்து விட்டார்.
இது குறித்து அவரது மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் விஜோ ஜோசப் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள். அர்ச்சுனனின் உடல் இன்று குழித்துறை அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்