search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் 27-ந்தேதி வருகை
    X

    குமரி மாவட்டத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் 27-ந்தேதி வருகை

    • ரூ.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நோயாளிகளுடன் இருப்பவர்கள் தங்கும் அறையை திறந்து வைக்கிறார்
    • ரூ.1.10 கோடி மதிப்பில் ஆறுதேசம் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

    நாகர்கோவில் :

    தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதா வது:-

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) குமரி மாவட்டத்துக்கு வருகிறார். அவர் அன்று மாலை 4 மணிக்கு நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடை பெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மருத்துவ மனையில் ரூ.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நோயாளிகளுடன் இருப்பவர்கள் தங்கும் அறையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இடைக்கோடு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார பொது சுகாதார அலகு கட்டிடத்தையும், ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உடையார்விளையில் புதிய துணை சுகாதார நிலைய கட்டிடத்தையும் திறந்து வைக்கிறார்.

    மேலும் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.2 கோடி மதிப்பில் ஆயுர்வேத மருந்து செய்நிலைய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரூ.1.10 கோடி மதிப்பில் ஆறுதேசம் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

    28-ந்தேதி (திங்கட்கி ழமை) நடப்போம் நலம் பெறுவோம் என்னும் நோக்கில் பொதுமக்கள் 8 கிலோ மீட்டர் தூரம் நடை பயிற்சி மேற்கொள்வ தற்கான தேர்வு செய்யப்பட்ட இடமான கன்னியாகுமரி சூரிய ஆஸ்தமன முனை முதல் பரமாத்மலிங்கபுரம் தபால் நிலையம் வரை ஆய்வு மேற்கொள்கிறார். பின்னர் அங்கிருந்து காரில் தூத்துக்கு டிக்கு செல்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×