search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் மேயர் மகேஷ் பேச்சு
    X

    தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் மேயர் மகேஷ் பேச்சு

    • கன்னியாகுமரிக்கு வருகிற 7-ந் தேதி ராகுல்காந்தி பாத யாத்திரையில் பங்கேற்க வரும் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
    • இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகரிலிருந்து 3000 பேர் கலந்து கொள்ள வேண்டும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி செயலாளர் மற்றும் நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.

    மாநகர் அவைத்தலைவர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மேயரும், கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான மகேஷ் சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் மேயர் மகேஷ் பேசியதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் தேர்தலில் கட்சி மேலிடம் அறிவித்த வேட்பாளரை எதிர்த்து தி.மு.க போட்டி வேட்பாளர் களம் இறங்கினார். அவருக்கு பாரதிய ஜனதா வழி மொழிந்தது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாரதிய ஜனதா தான் தி.மு.க.விற்கு எதிரி கட்சி. அந்தக் கட்சியுடன் சிலர் கூட்டணி வைத்துக்கொண்டு நம்மை பற்றி குறை கூறி வருகிறார்கள். அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் கட்சியின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். எதிரியாக இருந்தாலும் அவர்களை அரவணைத்து கொள்ளவேண்டும். பழிவாங்கும் எண்ணம் இருக்கக் கூடாது.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள 52 வார்டுகளிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் குறைகளை கேட்டு அறிந்து அந்த பிரச்சனைகளை தீர்க்க கவுன்சிலருடன் இணைந்து நான் பாடுபடுவேன். கன்னியாகுமரியில் வருகிற 7-ந் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரை தொடங்குகிறார் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க .ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகைதரும் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகரிலிருந்து 3000 பேர் கலந்து கொள்ள வேண்டும்.கிழக்கு மாவட்டம் முழுவதும் இருந்து 10,000 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநகர செய லாளர் வழக்கறிஞர் ஆனந்த், துணை செயலாளர்கள் வேல் முருகன், ராஜன், பொருளாளர் சுதாகர், பகுதி செயலாளர்கள் ஜீவா, ஷேக் மீரான், ஜவகர், துரை உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

    திமுக அரசின் சாத னைகளை விளக்கி தெருமுனை கூட்டங்கள், பொது கூட்டங்கள் நடத்த வேண்டும்.இளைஞரணி உறுப்பினர்கள் சேர்ப்பதை முழுமூச்சுடன் செயல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×