ஒழுகினசேரியில் மோட்டர் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி

தூக்கி வீசப்பட்ட முருகன் படுகாயம் அடைந்தார்.ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஒழுகினசேரியில் மோட்டர் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி
Published on

நாகர்கோவில் :

வடசேரி ஆசாரிமார் மேட்டு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 59) தச்சு தொழிலாளி.இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஒழுகினசேரி பகுதியில் ரோட்டை கடந்து சென்றபோது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முருகன் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com