என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ராஜாக்கமங்கலம் அருகே திருமணமான 6 மாதத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
- எதிர்பாராத விதமாக திடீரென மின்சாரம் தாக்கியது.
- கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.
கன்னியாகுமரி :
ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் கோவில்புரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் தனிஷ் (வயது 24), எலக்ட்ரீசியன். இவர் தனியார் கம்பெனியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.
நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்துக்கோணம் பகுதியில் தனிஷ் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மின்சாரம் தாக்கியது.
இதில் தனிஷ் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி தனிஷ் பரிதாபமாக இறந்தார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனிஷ் இறந்துபோன சம்பவம் தெரிந்ததும் அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்