search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேங்காய்பட்டணம் ஆழ்கடலில் தவறிவிழுந்து கேரள தொழிலாளி பலி
    X

    தேங்காய்பட்டணம் ஆழ்கடலில் தவறிவிழுந்து கேரள தொழிலாளி பலி

    • கடந்த மாதம் 29-ந் தேதி தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து மேத்யூ கில்பர்ட் மற்றும் சிலர் விசைப்படகில் மீன் பிடிக்க சென்றனர்.
    • மீன் பிடித்துக்கொண்டிரு க்கும்போது எதிர்ப்பாராமல் மேத்யூ கில்பர்ட் தவறி கடலில் விழுந்தார்.

    கன்னியாகுமரி :

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் வள்ளித்து றையை சேர்ந்தவர் மேத்யூ கில்பர்ட் (வயது39).

    மீன்பிடித் தொழிலாளி கடந்த மாதம் 29-ந் தேதி தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து மேத்யூ கில்பர்ட் மற்றும் சிலர் விசைப்படகில் மீன் பிடிக்க சென்றனர். 2 ம் தேதி இவர்களது படகு தேங்காய்பட்டணம் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிரு க்கும்போது எதிர்ப்பாராமல் மேத்யூ கில்பர்ட் தவறி கடலில் விழுந்தார்.

    இதனை பார்த்த உடன் சென்ற மீனவர்கள் கடலில் குதித்து அவரை மீட்டனர். அதற்குள் மேத்யூ கில்பர்ட் மூச்சு திணறி இறந்து விட்டார். ஆழ்கடல் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததால் உடனே படகு கரை திரும்ப முடியவில்லை. 3 நாட்கள் படகை கரை நோக்கி செலுத்தி நேற்று மதியம் தேங்காய்பட்டணம் துறைமுகம் வந்து சேர்ந்தனர்.

    இது குறித்து அவரது அண்ணன் ரமேஷ் குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார். மரைன் சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து மேத்யூ கில்பர்ட் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கடலில் தவறிவிழுந்து பலியான மேத்யூ கில்பர்ட்க்கு ஜினி என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×