என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்ததால் கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடியது
- படகுபோக்குவரத்து 4 நாட்களுக்கு பின் காலை 8 மணிக்கு தொடங்கியது
- ஓட்டல் மற்றும் கடைகளில் வியாபாரமும் குறைந்து விட்டன.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரியில் பவுர்ணமியையொட்டி கடந்த 4 நாட்களாக காலை10 மணி வரை கடல் ஒருபுறம் சீற்றமாகவும் மறுபுறம் நீர்மட்டம் தாழ்வாகவும் காணப்பட்டது.இதனால் 4 நாட்களாக கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 3 மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டு வந்தது.
வழக்கமாக தொடங்கும் நேரமான காலை 8 மணிக்கு பதில் 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.இதற்கிடையில்கடந்த 4 நாட்களாக தொடர் விடுமுறையின் காரண மாகவும்பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டதாலும் கன்னியாகுமரியி ல்ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்த வண்ணமாக இருந்தனர்.
ஆனால் விவேகானந்தர் மண்டபத்துக்கு இயற்கை சீற்றம் கார ணமாக படகு போக்கு வரத்து காலதாமதமாக தொடங்கப்பட்டது.இதனால் காலை நேரத்தில் வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தொடர்மழை பெய்த பிறகும் சுற்றுலாபயணிகளின் வருகை குறையவில்லை.கொட்டும் மழையிலும் குடைபிடித்துக்கொண்டு சுற்றுலா பயணிகள்சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்தனர். இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.
இதற்கிடையில் நேற்றுடன் தொடர்விடுமுறை முடிந்தது. மேலும் மழை இல்லாத மாவட்டங்களில் காலாண்டு தேர்வுமுடிந்து விடுமுறை விடப்பட்ட பள்ளிகளும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகையும்இன்று முதல் குறையதொடங்கிவிட்டது. மழையின் காரணமாகவும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவினாலும் கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளும் சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி கிடக்கிறது. ஓட்டல் மற்றும் கடைகளில் வியாபாரமும் குறைந்து விட்டன. லாட்ஜ்க ளில் உள்ள அறைகளும் காலியாக கிடக்கின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்