என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அகஸ்தீஸ்வரம் பகுதியில் தண்ணீர் இன்றி கருகும் நெற்பயிர்கள்
- விவசாயிகள் தெற்கு பத்தில் சுமார் 750 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிர் பயிரிட்டுஉள்ளனர்.
- மறுகால் நிரம்ப பொதுப் பணித்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
கன்னியாகுமரி :
குமரி மாவட்ட விவசாயிகளால் கும்பப்பூ நெல் சாகுபடி தற்போது பயிரிடப்பட்டு வரு
கிறது. அதேபோல் அகஸ்தீ ஸ்வரம் தென்தாமரை குளம்ஆகிய பேரூராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட இலந்தையடிவிளை, முகிலன்குடியிருப்பு, கிண்ணிக்கண்ணண்விளை, கோவில்விளை ஆகிய பகுதிகளைச்சேர்ந்த விவசாயிகள் தெற்கு பத்தில் சுமார் 750 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிர் பயிரிட்டுஉள்ளனர்.
இதற்காக கடந்த 3 வாரங்களுக்கு முன்பு நடவு உள்ளிட்ட முதல்கட்ட பணிகளை செய்து முடி த்துள்ளனர். தற்போது நெற்பயிர் சிறிதளவு வளர்ந்து வரும் நிலையில் தெற்கு பத்துக்கு தண்ணீர் வரும் தலக்குளத்தின் மறுகால் நிரம்பாததால் வயல்களுக்கு தண்ணீர் செல்லவில்லை.
தண்ணீர் இல்லாததால்வ யல்களில் வெடிப்பு ஏற்பட்டு நெல் பயிர்கள் அனைத்தும் கருகி வருகிறது. முப்போகம் விளையும் இம்மண்ணில் தற்போது இருபோகம் விளைவதே கேள்விகுறியாகி வருகிறது.
நஷ்டம் ஒரு பக்கம் ஏற்பட்டு வந்தாலும்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் ஆழ்ந்த சோகத்தில் மனமு டைந்து கண்ணீரும் கம்பலையுமான நிலை யில்இருந்து வருகின்றனர். எனவே விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக அகஸ்தீஸ்வரம் பகுதியில் உள்ள தலக்குளத்தின் மறுகால் நிரம்ப பொதுப் பணித்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்