search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கைத்தறி கண்காட்சி
    X

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கைத்தறி கண்காட்சி

    • கோட்டாட்சியர் இன்று தொடங்கி வைத்தார்
    • 1905-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி இந்திய விடுதலைப் போராட்டத்தில் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    1905-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி இந்திய விடுதலைப் போராட்டத்தில் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. இதனை நினைவு கூறும் பொருட்டு 8-வது தேசிய கைத்தறி தினம் மாவட்ட தலைநகரங்களில் இன்று கொண்டாடப்பட்டது.

    இதனை முன்னிட்டு குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி கைத்தறித் துறையின் சார்பில் இன்று நடத்தப் பட்டது.

    நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராம லிங்கம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி ஆகி யோர் குத்து விளக்கேற்றி கண்காட்சியினை தொடங்கி வைத்தனர்.

    கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளா தார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படு த்த வும்,கைத்தறி தொழிலை மேம்படுத்தி நெசவாள ர்களின் தரத்தை உயர்த்தும் பொருட்டும் , அவர்களின் பெருமையை பறைசாற்றுவதை நோக்கமாக கொண்டும் இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது.

    சிறப்புக் கைத்தறி கண்காட்சியில் பெருவாரி யான அரசு ஊழியர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு கைத்தறி ஜவுளிகளை கொள்முதல் செய்து MY DISTRICT MY HANDLOOM என்ற hashtag -க்கினை கைத்தறி ஜவுளிகளுடன் பிரபலப்ப டுத்தவும் நெசவாளர்களை சிறப்பிக்கவும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வும் மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.

    Next Story
    ×