search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருங்கல் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணிபுரிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
    X

    கருங்கல் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணிபுரிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • கிள்ளியூர் வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை
    • மருத்துவமனையில் உயிர்காக்கும் மருந்துகள்அனைத்தும் இருப்பு வேண்டும்

    கருங்கல் :

    கிள்ளியூர் கிழக்கு வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கமிட்டி கூட்டம் வட்டார கமிட்டி உறுப்பினர் றசல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. வட்டார செயலாளர் சாந்தகுமார், மாவட்ட குழு உறுப்பினர் எபிலைசியஸ் ஜோயல், கமிட்டி உறுப்பினர்கள் ஜாண்றோஸ், சோபனராஜ், குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் சுண்டவிளையில் செயல்பட்டுவரும் கருங்கல் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் வருகையை உறுதிபடுத்த வலியுறுத்துவது. மருத்துவமனையில் உயிர்காக்கும் மருந்துகள்அனைத்தும் இருப்பு வைப்பதோடு, அதிகரித்து வரும் காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு பரிசோதனை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசையும், சுகாதார துறையையும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×