என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புனித சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு இலவச கண் மருத்துவ முகாம்
- கால்வின் மருத்துவமனை சார்பில் நடக்கிறது
- இந்த முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் அருகே பட்டகசாலியன்விளையில் கால்வின் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை சார்பில் நாகர்கோவில் கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவி ழாவை முன்னிட்டு பொது மக்கள் பயன்பெறும் வகை யில் ஆலய திருவிழாவின் அனைத்து நாட்களிலும் ஆலயம் செல்லும்பாதை அருகே இலவச கண் மருத்துவ முகாம் நடை பெறுகிறது.
முகாமானது இன்று (25-ந்தேதி) முதல் 5-ம் நாள் திருவிழா வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், 6-ம் நாள் திருவிழா முதல் திருவிழா வின் கடைசி நாள் வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடை பெறுகிறது.
இந்த முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது.
மேலும் மருத்துவ குழுவினரால் கண் பரிசோதனை செய்யப் பட்டு பரிசோத னைக்கு பிறகு தேவைப்படும் நபர்க ளுக்கு 30 சதவீதம் தள்ளுபடி விலையில் கண் கண்ணாடி கள் வாங்கிக்கொள்ளலாம். மேலும் கண்புரை உள்ள வர்களுக்கு குறைந்த செல வில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும் முகா மில் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்