என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெட்ரோல் பங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்
    X

    பெட்ரோல் பங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்

    • சின்னமுட்டத்தில் கடை அடைப்பு
    • கருப்பு கொடிகளும் ஏற்றப்பட்டன

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்கு தளமாககொண்டு 350-க்கு மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடி தொழி லில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த நிலையில் சின்ன முட்டம் துறைமுக வளாகத்தில் பெட்ரோல் பங்கு அமைக்கும் பணி தொடங்கியது. இதற்கு சின்னமுட்டம் பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    சின்னமுட்டம் துறை முகத்தில் பெட்ரோல் பங்கு அமைக்க எதிர்ப்பு தெரி வித்து கடந்த 9-ந்தேதி முதல் சின்னமுட்டம் புனிததோமையார் ஆலயம் முன்பு மீனவர்கள் போராட் டம் நடத்தி வருகிறார்கள்.

    இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக ஏராள மான போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். போலீசார் நடத்திய சமரச பேச்சு வார்த்தையில் இதுவரை சமரசம் ஏற்பட வில்லை. இதைத்தொடர்ந்து இன்று 8-வது நாளாக சின்ன முட்டம் புனித தோமையார் ஆலயம் முன்பு பெட்ரோல் பங்க் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தக்கோரி மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    மேலும் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட் டுள்ளனர். இதனால் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் சின்ன முட்டம் மீனவர்க ளுக்கு சொந்தமான 94 விசைப்படகுகள் மட்டும் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. அதுமட்டுமின்றி சின்னமுட்டத்தில் பெட்ரோல் பங்க் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகள், விசைப்படகுகள் மற்றும் தெருக்களில் கருப்புக்கொடி கட்டப்பட்டுள்ளன.

    மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்ன முட்டத்தில் முழு கடை யடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டுள்ளன. தெருக்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. இதனால் அங்கு பெரும்பரபரப்பும் பதட்டமும் நிலவுகிறது. இதைத்தொடர்ந்து அங்கு இன்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுடன் போலீசார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×