என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரியில் மீனவர் கொலை - எங்களை பாட்டிலால் குத்தி காயப்படுத்தியதால் கொன்றோம்
- கைதான சிறுவர்கள் வாக்குமூலம்
- கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றி திரிந்து கொண்டிருந்தாக கூறப்படுகிறது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி சுனாமி காலனியை சேர்ந்தவர் சகாயம் (வயது 45). கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டனர். இதனால் அவர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றி திரிந்து கொண்டிருந்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த வாரம் இவருக்கும், கன்னியா குமரி சர்ச் சன்னதி தெருவை சேர்ந்த சுமார் 15 வயது மதிக்கத்தக்க சிறுவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் முன்வி ரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சகாயம் கன்னியாகுமரி வடக்கு தெரு பகுதியில் உள்ள ஒரு லாட்ஜ் அருகில் நின்று கொண்டிருந்தபோது அவரை அந்த 3 சிறுவர்களும் சேர்ந்து குத்தி கொலை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சகாயத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக கன்னியாகுமரி சர்ச் சன்னதி தெரு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவர் ஒருவரையும், 16 வயது இன்னொரு சிறுவரையும், வடக்கு குண்டல் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர் ஒருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் போலீசில் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளனர். அதில் அவர்கள் கூறியதா வது:-
சகாயத்துக்கும் எங்க ளுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது சகாயம் பாட்டிலை உடைத்து எங்களை குத்திவிட்டார். இதில் எங்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மீது இருந்து வந்த முன்விரோதம் காரணமாக நாங்கள் அவரை எப்படியா வது கொலை செய்ய வேண்டும் என்று திட்ட மிட்டோம். இந்த நிலையில் சகாயம் கன்னியாகுமரி வடக்கு தெரு பகுதியில் உள்ள ஒரு லாட்ஜ் முன்பு நின்று கொண்டிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நாங்கள் கத்தியுடன் அவரை கொலை செய்வதற்காக அங்கு சென்றோம். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சகாயத்தை எங்களது கையில் மறைத்து வைத்தி ருந்த கத்தியால் அவரது மார்பில் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட அந்த 3 சிறுவர்களையும் போலீசார் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்க ளை சீர்திருத்த பள்ளியில் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட் உத்தர விட்டார். அதன்படி அந்த 3 சிறுவர்களும் நெல்லையில் உள்ள சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்