என் மலர்
உள்ளூர் செய்திகள்

இரணியல் அருகே விவசாயி தற்கொலை
- வேலைக்கு செல்லாமல் இருந்ததால் உறவினர்கள், நண்பர்கள் கண்டித்துள்ளனர்
- சிகிச்சை பலனின்றி தாணுதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
கன்னியாகுமரி :
இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி இடமருவத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தாணுதாஸ் (வயது 49), விவசாயி. குடிப்பழக்கம் உள்ள தாணுதாஸ் சரியாகவேலைக்கு செல்லாமல் இருந்ததால் உறவினர்கள், நண்பர்கள் கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் சம்ப வத்தன்று இரவு வீட்டில் வைத்திருந்த களைக் கொல்லி மருந்தை தாணு தாஸ் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு ஆசா ரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தாணுதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி மதிகுமாரி கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






