search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வந்தே பாரத் ரெயிலை குமரி வரை நீட்டிக்க வேண்டும் - இளைஞர் காங்கிரஸ் கோரிக்கை
    X

    வந்தே பாரத் ரெயிலை குமரி வரை நீட்டிக்க வேண்டும் - இளைஞர் காங்கிரஸ் கோரிக்கை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பயணிகள் முன்பதிவு டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் நிலையே உள்ளது.
    • கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.

    நாகர்கோவில் :

    குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-

    சென்னை, நெல்லை இடையே வந்தே பாரத் ரெல் சேவை தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு காரணங்களுக்காக சென்னைக்கு செல்கின்ற னர். குமரி மாவட்டத்தில் இருந்து சென்னை செல்லும் பயணிகளுக்கு வசதியாக கன்னியாகுமரி, அனந்தபுரி, குருவாயூர், அந்தியோதயா உள்ளிட்ட சில ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தாலும் கூட, பயணிகள் முன்பதிவு டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் நிலையே உள்ளது.

    அதிலும் குருவாயூர், அனந்தபுரி ெரயில்கள் கேரளாவில் இருந்து இயக்கப்படுவதால் அங்கேயே முன்பதிவு இருக்கைகள் அதிக அளவில் நிரம்பி விடுவதும் தொடர் கதையாகி வருகின்றது. தமிழகத்தில் படித்தவர்கள் அதிகம் நிறைந்த மாவட்டம் என்பதால் குமரி மாவட்டத்தை சேர்ந்த பலரும் சென்னையில் பணி செய்து வருகின்றனர். அவர்கள் ஒவ்வொரு முறையும் சொந்த ஊர் வந்து, திரும்ப ெரயில் டிக்கெட் கிடைப்பதே பெரும் சிரமமாக உள்ளது. மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ெரயிலை தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். வந்தே பாரத் ெரயிலின் வேகத்தோடு ஒப்பிட்டால் கூடுதலாக 45 நிமிடங்கள் இயக்கினாலே போதும். அப்படி செய்வதன் மூலம் குமரி மாவட்டத்தில் இருந்து தலைநகர் சென்னைக்கு செல்ல கூடுதலாக ஒரு ெரயில் சேவை கிடைக்கும். குமரி மக்களின் சிரமமும் பெரும் அளவில் தீர்க்கப்ப டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    Next Story
    ×