search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியலில் நகை பறிப்பு வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் கைது
    X

    இரணியலில் நகை பறிப்பு வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் கைது

    • சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்
    • இரணியல் நீதிமன்றம் முன் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    இரணியல் :

    இரணியல் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த நகை பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் உள்ள ஒரு வழக்கில் ஜெயிலில் இருந்த ஒரு நபரை நீதிமன்றம் அனுமதி பெற்று காவலில் எடுத்து விசாரித்தனர்.

    அப்போது அவர் தலக்குளம், கள்ளியங்காடு பகுதியில் நகை பறிப்பில் ஈடுபட்டவர் என தெரிய வந்தது. விசாரணையில் அவர் முளகுமூடு பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மெர்லின் ராஜ் (வயது 42) என்பதும், திருவட்டார் பகுதியை சேர்ந்த ஒரு மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டபோது கொலை செய்தது தெரியவந்தது. மேலும் நாகர்கோவில் பிரபல துணிக்கடையின் பின்புறம் நடந்த செயின் பறிப்பு வழக்கில் நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் வழக்கில் சம்பந்தப்பட்ட விபரம் தெரியவந்தது. அவரை இரணியல் நீதிமன்றம் முன் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×