search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மாயமான பட்டதாரி பெண்
    X

    திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மாயமான பட்டதாரி பெண்

    • காதலனுடன் போலீசில் தஞ்சம்
    • பெற்றோரின் பாசப்போராட்டம் தோல்வி

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் வணிகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வகுமாரி (வயது 20), பட்டதாரி.

    இவருக்கு வருகிற 29-ந்தேதி திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்தி ருந்தனர். இதையடுத்து திருமணம் அழைப்பி தழ் கள் தயார் செய்யப்பட்டு உறவினர்களுக்கு வழங்கப் பட்டு வந்தது. இந்த நிலையில் வீட்டிலிருந்த செல்வகுமாரி திடீரென மாயமானார்.மகள் மாயமானது குறித்து அவரது தாயார் கோட்டார் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து மாயமான செல்வக்குமா ரியை தேடி வந்தனர். இந்த நிலையில் செல்வ குமாரி தனது காதலன் கார்த்திக் (24) என்பவர் உடன் கோட்டார் போலீசில் தஞ்ச மடைந்தார்.

    தாங்கள் இருவரும் சிறுவயதிலிருந்து காத லித்து வந்தோம். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரி வித்தனர். எனக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிற 29-ந்தேதி திருமணம் நடத்தவும் ஏற்பாடு செய்தனர். இதனால் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீ சார் கார்த்திக் மற்றும் செல்வகுமாரியின் பெற் றோருக்கு தகவல் தெரி வித்தனர். அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது செல்வ குமாரியை பெற்றோர் தங்க ளுடன் வருமாறு அழைத் தனர். ஆனால் செல்வ குமாரி மறுப்பு தெரிவித்தார்.

    காதலன் கார்த்திக்குடன் தான் செல்வேன் என்றும் அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார். பெற்றோர் பலமுறை அழைத்தும் அவர் செல்ல மறுப்பு தெரிவித்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    ஆனால் கார்த்திக்கின் பெற்றோர் செல்வக்குமா ரியை ஏற்றுக் கொண்டனர்.இதையடுத்து காதல் ஜோ டியை போலீசார் வாழ்த்தி கார்த்திக்குடன் அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×