என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இரணியல் அருகே தி.மு.க. ஒன்றிய செயலாளருக்கு அடி-உதை
கன்னியாகுமரி:
இரணியல் அருகே உள்ள தலக்குளம் பகுதியில் இன்று காலியிடங்களுக்கான தேர்தல் நடந்தது. இதனை முன்னிட்டு கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோபால்கிரு ஷ்ணன்,தேர்தல் பொறுப்பா ளராக நியமிக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் அவர் புது விளை பகுதியில் நேற்று இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிலர் அங்கு வந்தனர். அவர்கள் கோபால்கிருஷ்ணனிடம் தேர்தல் பணியில் ஈடு பட்டவர்கள் இரவு நேர த்தில் எதற்காக இங்கு வந்தீர்கள்?என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர் தாக்க ப்பட்டதாக கூறப்படுகிறது. நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை க்காக சேர்ந்துள்ள கோபால் கிருஷ்ணன், புதுவிளை பகுதியைச் சேர்ந்த மணி கண்டன், அய்யப்பன், கோபு, ரமேஷ் ஆகியோர் தன்னை தாக்கிய தாக இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோல் புதுவிளை சுதாகர் என்பவர் இரணியல் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், அதே பகுதியைச் சேர்ந்த 4 பேர் தன்னை தாக்கியதாக தெரிவித்து உள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்