search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பீச் ரோட்டில் மோட்டார் சைக்கிள் கொள்ளையனுக்கு தர்ம அடி - 108 ஆம்புலன்சில் இருந்து தப்பி ஓட்டம்
    X

    பீச் ரோட்டில் மோட்டார் சைக்கிள் கொள்ளையனுக்கு 'தர்ம அடி' - 108 ஆம்புலன்சில் இருந்து தப்பி ஓட்டம்

    • மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது
    • 108 ஆம்புலன்சில் கொண்டு செல்லும் வழியில் அந்த வாலிபர் வாகனத்தை நிறுத்த விட்டால் கீழே குதித்து விடுவதாக மிரட்டினார்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை பீச் ரோடு பகுதியில் நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார்.சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது.

    அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்த போது மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை. மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு திருடப்பட்ட அதே இடத்தில் தனது மோட்டார் சைக்கிளை நம்பர் பிளேட் மாற்றி வைத்திருந்ததை பார்த்த உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து மோட்டார் சைக்கிள் கொள்ளையனை பிடிக்க அவர் முடிவு செய்து மோட்டார் சைக்கிள் அருகே நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை எடுக்க முயன்றார். இதையடுத்து மோட்டர் சைக்கிள் உரிமையாளர் அந்த வாலிபரை பிடித்து திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். இதையடுத்து அங்கு கூடியிருந்த பொது மக்கள் அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக தாக்கினார்கள்.

    பின்னர் கொள்ளையன் பிடிபட்டது குறித்து போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்கள் பிடியிலிருந்த கொள்ளையனை மீட்டனர். மீட்கப்பட்ட நபருக்கு பொதுமக்கள் தாக்கியதில் உடலில் காயங்கள் ஏற்பட்டி ருந்தது. பிடிபட்ட வாலிபர் இடலாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து போலீசார் அவரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க 108 ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அந்த வாலிபர் வாகனத்தை நிறுத்த விட்டால் கீழே குதித்து விடுவதாக மிரட்டினார். உடனே டிரைவர் 108 ஆம்புலன்சை நிறுத்தினார். ஆம்புலன்சில் இருந்து இறங்கி தப்பிச் சென்று விட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×