search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
    X

    பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

    • நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்
    • இன்று புரட்டாசி சனிக்கிழமை

    நாகர்கோவில் :

    புரட்டாசி சனிக்கிழமை களில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் துன்பங்கள் நீங்கி ஆனந்தம் கிடைக்கும், நினைத்த காரியம் கைக்கூடும் என்பது ஐதீகம். இதனால் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.

    புரட்டாசி முதல் சனிக் கிழமையான இன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. வடி வீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவிலில் நடை திறக்கப் பட்டது முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    பக்தர்கள் நீண்ட வரிசை யில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். கோவி லில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்க ளுக்கு பிரசாதமும் வழங்கப் பட்டது. திருவட்டார் ஆதி கேசவ பெருமாள் கோவிலி லும் இன்று அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    காலை முதலே பக்தர்கள் வந்து பெருமாளை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

    திருப்பதிசாரம் திரு வாழ்மார்பன் கோவிலில் காலையில் பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. கன்னியாகுமரி விவே கானந்தபுரம் விவேகானந்த கேந்திர கடற்கரை வளா கத்தில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடா ஜலபதி கோவிலில் இன்று காலை 6 மணிக்கு சுப்ரபாத தரிசனமும், அதைத் தொடர்ந்து விசேஷ பூஜை களும், சிறப்பு வழிபாடுகளும் தீபாராதனை யும் நடந்தது.

    இதில் திரளான பக்தர் கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை 5 மணிக்கு தோ மாலை சேவையும், அதைத்தொடர்ந்து சுவாமி பள்ளியறை எழுந்தருளும் நிகழ்ச்சியும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

    பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், சுசீந்தி ரம் துவாரகா கிருஷ்ணன் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள கிருஷ்ண சாமி கோவில், கோட்டார் வாகையடி தெருவில் உள்ள ஏழாகரம் பெருமாள் கோவில், வட்டவிளை தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், ஆஸ்ராமம் திருவேங்கட விண்ணகப் பெருமாள் கோவில், மகாதானபுரம் நவநீத சந்தான கோபால கிருஷ்ண சாமி கோவில், கன்னியா குமரி பால கிருஷ்ண சாமி கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    கோவிலில் பெருமாளை தரிசிப்பதற்கு காலை முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாத மும் வழங்கப்பட்டது.

    Next Story
    ×