என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி செவ்வாய், பவுர்ணமியை முன்னிட்டு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம்
    X

    ஆடி செவ்வாய், பவுர்ணமியை முன்னிட்டு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம்

    • மண்டைக்காட்டில் குவிந்து பொங்கலிட்டு அம்மனை வழிபடுவர்.
    • உச்சக்கால பூஜையின்போது பெண்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிப்பட்டனர்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் தினமும் பக்தர்களின் கூட்டம் நிறைந்து காணப்படும். செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் பவுர்ணமி நாட்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் மண்டைக்காட்டில் குவிந்து பொங்கலிட்டு அம்மனை வழிபடுவர்.

    இந்நிலையில் ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை முதல் தினமும் மண்டைக்காட்டில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.நேற்று செவ்வாய்க்கிழமை மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு காலை முதலே மண்டைக்காட்டில் பக்தர்கள் குவிந்தனர்.அவர்கள் கடலில் புனித நீராடி,பொங்கலிட்டு அம்மனை வழிப்பட்டனர்.இதனால் கோவில் சன்னதி, கடற்கரை, பொங்கலிடும் பகுதி ஆகிய பகுதியில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.உச்சக்கால பூஜையின்போது பெண்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிப்பட்டனர்.

    Next Story
    ×