என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தாமரைகுளம் பதியில் விருந்துண்ட நாள் திருவிழா
- தம் சீடர்களுக்கும் விருந்து வழங்கி வழிபட்ட நாள்
- மாலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், 7 மணிக்கு இனிப்பு தர்மம் வழங்குதலும் நடைபெற்றது.
கன்னியாகுமரி :
ஐம்பதிகளில் அகிலத்திரட்டு அம்மானை வழங்கிய மூலப்பதியான தாமரைகுளம் பதியின் முதல் குருவான குரு.பொன்னணைஞ்சவன் உடையகுட்டி நாடார் அய்யாவுக்கும், அவர் தம் சீடர்களுக்கும் விருந்து வழங்கி வழிபட்ட நாளை ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை விருந்துண்ட திருநாளாக கொண்டாடப்படுகிறது.
பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலை 5.30 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், காலை 7 மணிக்கு பால் மற்றும் இனிப்பு தர்மம் வழங்குதலும், 11 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும்,
11.30 மணிக்கு உச்சிப்படிப்பும், நண்பகல் 12.30 மணிக்கு அன்னதானமும், மாலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், இரவு 7 மணிக்கு இனிப்பு தர்மம் வழங்குதலும் நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாடுகளை தாமரைகுளம் பதி தக்கார், பதி பரம்பரை குருமார்கள் மற்றும் அய்யாவழி பக்தர்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்