என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குளச்சல் கடலில் தொடரும் சூறைக்காற்று - 4-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
- சுமார் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000 க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழிலில் ஈடுப்பட்டு வருகிறது
- வானிலை எச்சரிக்கையை அடுத்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் அனைத்தும் நேற்று கரை திரும்பி உள்ளன என்பது குறிப்பிட்டத்தக்கது
கன்னியாகுமரி:
குளச்சல் கடல் பகுதியில் தொடரும் சூறைக்காற்று காரணமாக கட்டுமரங்கள் இன்று 4 வது நாளாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000 க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழிலில் ஈடுப்பட்டு வருகிறது.குளச்சல் பகுதியில் கடந்த 4 நாட்களாக பலத்த காற்று வீசுகிறது. கடல் பகுதியில் சூறைக் காற்று வீசுகிறது.இதனால் கடலில் ராட்சத அலைகள் எழுந்து கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
கட்டுமரங்கள் மணற்பரப்பில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. 1 ம் தேதி முதல் 4 ம் தேதிவரை (இன்று) மீன்வளத்துறை மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என கடந்த 1ம் தேதி வானிலை எச்சரிக்கை அறிவித்திருந்தது.மழை விட்டுவிட்டு பெய்து வந்தாலும் கடலில் காற்று தொடர்ந்து வீசி வருகிறது.
தொடர்ந்து கடல் சீற்றமாக இருந்து வருகிறது. இதனால் இன்று 4 வது நாளாக குளச்சலில் பைபர் வள்ளங்கள், கட்டுமரங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.இதனால் குளச்சலில் 4 வது நாளாக மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
வானிலை எச்சரிக்கையை அடுத்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் அனைத்தும் நேற்று கரை திரும்பி உள்ளன என்பது குறிப்பிட்டத்தக்கது.அவை குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்