search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சல் கடலில் தொடரும் சூறைக்காற்று - 4-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
    X

    குளச்சல் கடலில் தொடரும் சூறைக்காற்று - 4-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

    • சுமார் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000 க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழிலில் ஈடுப்பட்டு வருகிறது
    • வானிலை எச்சரிக்கையை அடுத்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் அனைத்தும் நேற்று கரை திரும்பி உள்ளன என்பது குறிப்பிட்டத்தக்கது

    கன்னியாகுமரி:

    குளச்சல் கடல் பகுதியில் தொடரும் சூறைக்காற்று காரணமாக கட்டுமரங்கள் இன்று 4 வது நாளாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000 க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழிலில் ஈடுப்பட்டு வருகிறது.குளச்சல் பகுதியில் கடந்த 4 நாட்களாக பலத்த காற்று வீசுகிறது. கடல் பகுதியில் சூறைக் காற்று வீசுகிறது.இதனால் கடலில் ராட்சத அலைகள் எழுந்து கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    கட்டுமரங்கள் மணற்பரப்பில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. 1 ம் தேதி முதல் 4 ம் தேதிவரை (இன்று) மீன்வளத்துறை மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என கடந்த 1ம் தேதி வானிலை எச்சரிக்கை அறிவித்திருந்தது.மழை விட்டுவிட்டு பெய்து வந்தாலும் கடலில் காற்று தொடர்ந்து வீசி வருகிறது.

    தொடர்ந்து கடல் சீற்றமாக இருந்து வருகிறது. இதனால் இன்று 4 வது நாளாக குளச்சலில் பைபர் வள்ளங்கள், கட்டுமரங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.இதனால் குளச்சலில் 4 வது நாளாக மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

    வானிலை எச்சரிக்கையை அடுத்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் அனைத்தும் நேற்று கரை திரும்பி உள்ளன என்பது குறிப்பிட்டத்தக்கது.அவை குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×