search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் அருகே விஷ வண்டுகள் கடித்து கட்டிட தொழிலாளி சாவு
    X

    திருவட்டார் அருகே விஷ வண்டுகள் கடித்து கட்டிட தொழிலாளி சாவு

    • அந்த ரப்பர் மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி இருந்தது.
    • திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    திருவட்டார் :

    திருவட்டார் அருகே கொசுவன்பிலாவிளை மாத்தார் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்துராஜ் (வயது 53), கட்டிட தொழிலாளி.

    இவர் தனது தம்பியின் பக்கத்து வீட்டின் மாடியில் சாய்ந்து கிடந்த ரப்பர் மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றுவதற்காக சென்றார். அந்த ரப்பர் மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி இருந்தது.

    இதை பார்க்காமல் கிறிஸ்துராஜ் மரத்தின் கிளைகளை வெட்டும்போது இவர் மீது விஷ வண்டுகள் கொட்டியது. இதில் இவரின் உடல் முழுவதும் வீக்கம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கிறிஸ்துராஜ் பரிதாபமாக இறந்தார். இவரது மகன் ஸ்டாலின் கொடுத்த புகாரின் பேரின் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×