search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருங்கல் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
    X

    கருங்கல் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

    • விஜய் வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.பங்கேற்பு
    • உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததை கண்டித்தும் வன்முறைகளை தடுக்க தவறிய மத்திய, மாநில பாரதிய ஜனதா அரசுகளை ராஜினாமா செய்ய கோரியும் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருங்கல் ஆட்டோ நிறுத்தத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். பேரூராட்சி, ஊராட்சி காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், கிள்ளியூர் எம்.எல்.ஏ.வுமான ராஜேஷ் குமார் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    விஜய் வசந்த் எம்.பி., குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில சிறப்பு பேச்சாளர் பால்துரை சிறப்பு விருந்தி னராக கலந்துகொண்டு மணிப்பூர் கலவரத்தை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் மத்திய மற்றும் மாநில பாரதிய ஜனதா அரசுகளை கண்டித்து கண்டன உரையாற்றினார்.

    இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் டைட்டஸ், மாநில பொதுச் செயலாளர் ஆஸ்கார் பிரடி, கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய் மற்றும் மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள், துணை அமைப்புகளின் மாவட்ட, வட்டார தலைவர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×