search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நண்பர்கள் தள்ளிவிட்டதில் காங்.நிர்வாகி சாவு
    X

    நண்பர்கள் தள்ளிவிட்டதில் காங்.நிர்வாகி சாவு

    • கைதான 2 பேர் சிறையில் அடைப்பு
    • குளச்சல் போலீசார் நடவடிக்கை

    குளச்சல் :

    குளச்சல் அருகே மேற்கு நெய்யூர் காரவிளையை சேர்ந்தவர் லாசர் (வயது 62). சோடா கம்பெனி நடத்தி வந்த இவர், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரசில் விவசாய அணி துணை தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். சம்பவத் தன்று நண்பர்களான குளச்சல் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த செல்லப் பன் (65), கூத்தாவிளை தேவதாஸ் (48) ஆகியோரு டன் குளச்சலில் உள்ள டீக்கடை அருகே நின்று லாசர் பேசிக்கொண்டி ருந்தார்.

    அப்போது அவர்க ளுக்குள் திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் செல்லப்பன், தேவதாஸ் ஆத்திரத்தில் லாசரை தள்ளி விட்டனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர், ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டு 12-ந் தேதி சிகிச்சை பலனின்றி பரி தாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்ப பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து செல்லப்பன், தேவதாஸ் ஆகியோரை தேடிவந்தனர். இந்த நிலையில் தேவதாஸ், குளச்சல் போலீஸ் நிலை யத்தில் சரணடைந்தார்.அவரை போலீசார் இரணி யல் கோர்ட்டில் ஆஜப்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். மேலும் தலை மறைவாகி இருந்த செல்லப்பனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் அஞ்சுகிராமத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பே ரில் போலீசார் அங்கு சென்று செல்லப்பனை கைது செய்தனர். பின்னர் அவர் இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×