search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழ் குளத்தில் காங்கிரஸ் பிரமுகர் இல்ல திருமண விழா
    X

    கீழ் குளத்தில் காங்கிரஸ் பிரமுகர் இல்ல திருமண விழா

    • எம்.பி., எம். எல். ஏ.க்கள் பங்கேற்பு
    • வாழ்த்திய அனைவருக்கும் மணமக்கள் சார்பில் வக்கீல் பால் மணி நன்றி கூறினார்.

    மார்த்தாண்டம் :

    கீழ்குளம் கொடித்தாறா விளை பகுதியைச் சேர்ந்த வர் வக்கீல் பால்மணி. இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி மேரி விஜயராணி காப்புக்காடு புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இந்த தம்பதியினரின் மகள் ஜெனிஷா பால்-க்கும், கருங்கல் உலகன் விளையை சேர்ந்த ஜஸ்டஸ் மற்றும் கிளார் கிறிஸ்டல் பியாட்டரிஸ் தம்பதியினரின் மகன் ஜகித் தேவப்பிரிய னுக்கும் நேற்று கீழ்குளம் பாத்திமா நகர் புனித ஜான் போஸ்கோ ஆலயத்தில் திருமணம் நடைபெற்றது.திருமணத்தை ஆயர் ரெமிஜியூஸ் நடத்தி வைத்தார்.

    இந்த திருமண விழாவில் விஜய் வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர்.பினுலால் சிங், அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், மேற்கு மாவட்ட அதிமுக செயலா ளர் ஜாண் தங்கம், குழித்துறை நகர்மன்ற தலைவர் பொன். ஆசைத் தம்பி, கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கிரிஸ்டல் ரமணி பாய், களியக்காவிளை பேரூராட்சித் தலைவர் சுரேஷ், உண்ணாமலை கடை பேரூராட்சி தலைவி பமலா, முன்னாள் மேல்புறம் வட் டார தலைவர் சதீஷ் மற்றும் அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக் களை வாழ்த்தினார்கள். வாழ்த்திய அனைவருக்கும் மணமக்கள் சார்பில் வக்கீல் பால் மணி நன்றி கூறினார்.

    Next Story
    ×