search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் கலைஞர் உரிமை திட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக கலெக்டர் ஆய்வு
    X

    நாகர்கோவிலில் கலைஞர் உரிமை திட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக கலெக்டர் ஆய்வு

    • அனைத்து துறை ஊழியர்களும் வீடு வீடாக சென்று கள ஆய்வு மேற் கொண்டு வருகிறார்கள்.
    • விண்ணப்பபடிவங்கள் உள்ள குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்து வழங்க பொது மக்களுக்கு அறிவுறுத்தினார்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கலைஞர் உரிமை திட்டத்திற் கான விண்ணப்ப படி வங்கள் பொதுமக்க ளுக்கு வழங்கப்பட்டு அந்த விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்து பெறப்பட் டுள்ளது. மாவட்டம் முழுவதும் 4 லட்சத்து 19 ஆயிரம் பேர் விண்ணப் பங்களை பூர்த்தி செய்து வழங்கியுள்ளார்கள். இந்த விண்ணப்ப படிவங்களில் ஒரு சில விண்ணப்ப படிவங்களில் குறைபாடுகள் இருந்ததையடுத்து அந்த விண்ணப்ப படிவங்களை கள ஆய்வு செய்ய நடவ டிக்கை எடுக்கப்பட்டுள் ளது.

    ரேஷன் கடை ஊழியர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள், பொதுப்பணித் துறை, சுகாதாரத்துறை உட்பட அனைத்து துறை ஊழியர்களும் வீடு வீடாக சென்று கள ஆய்வு மேற் கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் கலெக்டர் ஸ்ரீதர் கலைஞர் உரிமை திட்ட விண்ணப்ப படி வங்கள் ஆய்வு தொடர்பாக நேரில் ஆய்வு மேற் கொண்டார். நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வயல் தெரு, இருளப்பபுரம் வட்டவிளை, வேதநகர், தாமஸ் நகர் பகுதிகளில் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார்.

    பூர்த்தி செய்து வழங்கப்பட்ட விண்ணப்பபடிவங்கள் உள்ள குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்து வழங்க பொது மக்களுக்கு அறிவுறுத்தினார்.

    Next Story
    ×