search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சல் அரசு பணிமனை முன்பு சி.ஐ.டி.யு. சத்தியாக்கிரக போராட்டம்
    X

    குளச்சல் அரசு பணிமனை முன்பு சி.ஐ.டி.யு. சத்தியாக்கிரக போராட்டம்

    • 576 எம்.சர்வீஸ் ஓட்டுனர் பணியிடத்தை மீண்டும் சி.ஐ.டி.யு.க்கு வழங்க வலியுறுத்தல்
    • சத்தியாக்கிரக போராட்டத்தில் பணிமனை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் குளச்சல் பணிமனையில் சி.ஐ.டி.யு.க்கு ஒதுக்கப்பட்டிருந்த 576 எம்.சர்வீஸ் ஓட்டுனர் பணியிடத்தை மீண்டும் சி.ஐ.டி.யு.க்கு வழங்க வலியுறுத்தி குளச்சல் பணிமனை முன்பு சி.ஐ.டி.யு.சார்பில் சத்தியாக்கிரக போராட்டம் நடந்தது.

    பணிமனை சி.ஐ.டி.யு.செயலாளர் ஜாண் பென்னி தலைமை வகித்தார். தலைவர் ரெத்தினராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் தங்கமோகன் துவைக்கவுரை ஆற்றினார். பொதுச்செயலாளர் சுரேஷ் குமார் சிறப்புரை ஆற்றினார். மற்றும் நிர்வாகிகள் நடராஜன், லெனின் ஜெயா, ஜாண்சன், ராஜேந்திரன் உள்பட 12 பணிமனை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×