search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிற்றார்2-ல் 22.4 மில்லி மீட்டர் மழை பதிவு
    X

    சிற்றார்2-ல் 22.4 மில்லி மீட்டர் மழை பதிவு

    • மழைக்கு மேலும் 8 வீடுகள் இடிந்தது
    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.73 அடியாக உள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. களியல், புத்தன் அணை, சிற்றாறு-2, திற்பரப்பு பகுதிகளில் மழை பெய்தது. சிற்றாறு 2-ல் அதிகபட்சமாக 22.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகள் நிரம்பி வருவதையடுத்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகி றார்கள். பேச்சிபாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 42.11 அடி யாக உள்ளது. அணைக்கு 341 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 173 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.73 அடியாக உள்ளது. அணைக்கு 376 கன அடிதண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 350 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படு கிறது.

    சிற்றாறு 1- அணை நீர்மட்டம் 15.28 அடியாகவும், சிற்றாறு 2- அணை நீர்மட்டம் 15.38 அடியாகவும் பொய்கை அணை நீர்மட்டம் 8.60 அடியாகவும் உள்ளது. மாம்பழத்துறை யாறு நீர்மட்டம் முழு கொள்ளவான 54.12 அடியாக உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்ப டும் முக்கடல் அணையும் முழு கொள்ளளவான 25 அடியை எட்டி நிரம்பி வழிகிறது. மாவட்டம் முழு வதும் கடந்த 2 மாதமாக கொட்டி தீர்த்த மழைக்கு 150- க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந் துள்ளன.

    இந்த நிலையில் நேற்று மேலும் 8 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அகஸ்தீஸ்வ ரம் தாலுகாவில் 2 வீடு களும், கிள்ளியூர், தோவா ளை தாலுகாவில் தலா ஒரு வீடும், திருவட்டார் தாலுகா வில் 4 வீடுகளும் இடிந்து விழுந்து உள்ளன.

    Next Story
    ×