search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
    X

    சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

    • கன்னியாகுமரியில் சூறாவளி காற்று வீசியது
    • மீன்கள் அதிகமாக இல்லாததால் வெளியூர், உள்ளூர் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள் ளது. இந்த துறை முகத்தை தங்குதளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடு பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் கன்னியா குமரி பகுதியில் கடந்த 2 நாட்களாக கடுமையான சூறாவளி காற்று வீசி வரு கிறது. இதனால் கடல் கொந்தளிப்பாகவும், சீற்றமாகவும் காணப்படு கிறது. மேலும் மணிக்கு 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி மாற்று வீச கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து சின்ன முட்டம் துறை முகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடு பட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் இந்த விசைப்பட குகள் அனைத்தும் சின்ன முட்டம் மீன்பிடி துறை முகத்தில் நங்கூரம் பாய்ச்சி கரையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இதனால் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்துக்கு மீன் வரத்து அடியோடு நின்றுவிட்டன. இதைத்தொ டர்ந்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மின் சந்தைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. மீன் விலையும் 'கிடுகிடு"என்று உயர்ந்து உள்ளது. இதே போல ஆரோக்கியபுரம், கன்னியாகுமரி, சின்ன முட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் சூறாவளி காற்று காரணமாக பெரும்பாலான கட்டுமரம், வள்ளம் மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் இந்த கடற்கரை கிராமங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் சூறைக்காற்று வீசியதால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. இதற்கி டையில் சாரல் மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் கடுமையான குளிர்காற்று வீசுகிறது.

    இதேபோல் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 1000-க்கணக்கான பைபர் வள்ளங்கள் உள்ளன. குளச்சல் மீன்பிடித் துறை முகத்தை தங்கு தளமாக கொண்டு மீன் பிடித்து வருகிறார்கள். விசைப்படகுகள் மீன் பிடி தடைக்காலமாக உள்ளதால் மீன்பிடிக்க செல்லாமல் மீன் பிடித்துறை முகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    வானிலை எச்சரிக்கை காரணமாக குளச்சல் சுற்று வட்டார பகுதியில் உள்ள பைபர் வள்ளங்கள், கட்டு மரங்கள் மீன்பிடிக்க செல்ல வில்லை. மேலும் மேடான பகுதியில் வள்ளங்களை மீனவர்கள் நிறுத்தி வைத் துள்ளனர். காற்று அதிகமாக காணப்படுவதால் குறைந்த அளவு மீனவர்களே மீன் பிடிக்க சென்றதால் மீன்கள் வரத்து குறைந்தது. மீன்கள் அதிகமாக இல்லாததால் வெளியூர், உள்ளூர் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    Next Story
    ×