search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் குழந்தைகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி
    X

    நாகர்கோவிலில் குழந்தைகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி

    • கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்
    • கல்லூரி மாணவ-மாணவிகள் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்

    நாகர்கோவில், நவ.14-

    குழந்தைகள் தினம், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம் மற்றும் சர்வதேச குழந்தைகள் தினத்தை யொட்டி விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஸ்ரீதர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பேரணியில் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரி மாணவிகள், ஹோலிகிராஸ் கல்லூரி உள்ளிட்ட தனியார் கல்லூரி மாணவ-மாணவிகள் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். பேரணியில் கலந்துகொண்ட மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் முடிவடைந்தது. பேரணியில் மாவட்ட வருவாய் அதிகாரி பால சுப்பிரமணியன், சமூக நலத்துறை அதிகாரி சரோ ஜினி, குழந்தைகள் அலுவலர் ஜெயந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×