என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
8 பாதிரியார்கள் உள்பட 500 பேர் மீது வழக்கு
நாகர்கோவில்:
தூத்தூர் புனித யூதா கல்லூரியின் பின்புறம் 13 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த அகமது ரஷீத் என்பவருக்கு சொந்த மானது எனக் கூறப்படுகிறது. இந்த நிலத்திற்கு கல்லூரி நிர்வாகம் உரிமை கோரி வந்த நிலையில் வருவாய் துறையினர் அகமது ரசீதுக்கு உரிமை உள்ளது என்று அதற்கான சான்றிதழ் வழங்கி உள்ள னர்.
இதைத்தொடர்ந்து அகமது ரசீது நித்திரவிளை போலீசாரின் பாதுகாப்புடன் நிலத்தை சுற்றி முள்வேலி அமைத்தார். இதனை தூத்தூர் மண்டல மீனவ மக்கள் மற்றும் எட்டு ஊர் பங்கு தந்தைகள் சேர்ந்து முள்வேலியை அப்புறப்ப டுத்தியதாக தெரிகிறது.
இது தொடர்பாக 8 பங்கு தந்தைகள் மற்றும் 50-க்கு மேற்பட்ட மீனவ மக்கள் மீது நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இதற்கு கண்டனம் தெரி வித்து அந்த கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்பு களை புறக்கணித்து போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை முள்வேலி அகற்றுவதில் ஈடுபட்டதாக சின்னத்துறை பகுதியைச் சேர்ந்த ராஜு என்பவரை போலீசார் கைது செய்தனர்.ராஜு கைது செய்யப்பட்ட தகவல் அந்த பகுதி மீனவ மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து தூத்தூர் மண்டலத்திற்குட்பட்ட 8 பங்கு தந்தைகள் மற்றும் மீனவப் பெண்கள் நித்திர விளை போலீஸ் நிலை யத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட ராஜுவை விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள்.
போராட்டத்தில் ஈடு பட்டவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் பேச்சுவார்த்தை நடத்தி னார். ஆனால் மீனவர் கள் சமாதானம் அடைய வில்லை. அங்கேயே திரண்டு இருந்தனர். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட ராஜு வை கோர்ட்டில் ஆஜர்ப டுத்த போலீசார் முயன்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரி வித்து போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் கைதான நபரை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
காலை 11 மணிக்கு தொடங்கிய போராட்டம் இரவு 10 மணிக்கு முடிவுக்கு வந்தது.
சுமார் 11 மணி நேரம் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட தூத்தூர் பங்கு தந்தை ஷாபின், சின்னத்துறை பங்கு தந்தை ஜிபு, மார்த்தாண்டம் துறை பங்கு தந்தை சுரேஷ் பயஸ், நீரோடி பங்கு தந்தை கிளிட்டஸ், இரவிபுத்தன் துறை பங்கு தந்தை ரெஜிஸ் பாபு, இரயுமன்துறை பங்கு தந்ைத அஜிஸ் ஜாண் சுமேஷ், பூத்துறை பங்கு தந்தை பென்சிகர், வள்ளவிளை பங்கு தந்தை ரிச்சார்டு சகாரியஸ் ஆகிய 8 பாதிரியார்கள் உள்பட 500 பேர் மீது நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143, 341, 353 ஆகிய 3 பிரிவுகள் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்