search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் கோணம் அரசு கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா
    X

    நாகர்கோவில் கோணம் அரசு கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா

    • அறிவியல் கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
    • ல்லூரி முதல்வர் பிரகாசி அருள் ேஜாதி தலைமை தாங்கினார்

    நாகர்கோவில் : நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் பிரகாசி அருள் ேஜாதி தலைமை தாங்கினார். நூல் வெளியீட்டு விழாவில் ஜோதி ரவீந்திரன் எழுதிய " சிறகு முளைத்து பறக்கும் சமகாலக் கவிதைகள்" மற்றும் அழுதன் எழுதிய "வானத்தை குறி வையுங்கள்" ஆகிய 2 நூல்களை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட் வெளியிட கல்லூரி முதல்வர் பிரகாசி அருள் ஜோதி பெற்றுக்கொண்டார்.நிகழ்ச்சியில் கல்லூரி தமிழ்த்துறை முதல்வர் அலெக்சாண்டர், ஹோலி கிராஸ் கல்லூரி தமிழ்துறை உதவி பேராசிரியர் டெல்பின், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி தமிழ்துறை உதவி பேராசிரியர் டி.பி.மோள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×