search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் அரசு விடுதிகளில் மாணவர் சேர்க்கை
    X

    பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் அரசு விடுதிகளில் மாணவர் சேர்க்கை

    • மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென மொத்தம் 8 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன
    • பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசால் குமரி மாவட்டத்தில் பிற்படுத்தப் பட்டோர், மிகப் பிற்படுத்தப் பட்டோர், சீர்மரபினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென மொத்தம் 8 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பிற்படுத்தப்பட் டோர் நல பள்ளி விடுதிகள் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவியர் விடுதி, நாகர்கோவில், அரசு பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவியர் விடுதி, அழகப்பபுரம் ஆகியன உள்ளன.

    பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி விடுதிகளாக அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவியர் விடுதி, நாகர்கோவில், அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவியர் விடுதி, கோவளம். அரசு பிற்படுத்தப் பட்டோர் நல கல்லூரி மாணவியர் விடுதி, சுங்கான் கடை. அரசு பிற்படுத்தப் பட்டோர் நல கல்லூரி மாணவியர் விடுதி, அகஸ்தீஸ் வரம் உள்ளன.

    அரசு பிற்படுத்தப்பட் டோர் நல கல்லூரி மாணவர் விடுதி, அகஸ்தீஸ்வரம் (இ) பால்குளம். சிறுபான்மை யினர் நல கல்லூரி விடுதி அரசு சிறுபான்மையினர் நல கல்லூரி மாணவியர் விடுதி பால்குளத்தில் உள்ளது. பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ-மாணவியர்களும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ-மாணவி கள் சேர தகுதியுடையவர்கள் ஆவர்.

    விடுதிகளில் பின்வரும் எவ்வித செலவினமும் இல்லாமல் சலுகைகள் இலவ சமாக வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவ-மாணவிகளுக்கு உணவு, தங்கும் வசதியும் அளிக்கப்ப டும். 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவி களுக்கு 4 இணை சீருடைகள் வழங்கப்படும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி வழங்கப்படும். மலைப்பி ரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும். விடுதிகளில் சேருவதற்கான தகுதிகளாக பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்த பட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். தூர விதி மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ-மாணவியர் விண்ணப்பங் களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் காப்பாளினிகளிட மிருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலகத்திலி ருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்த வரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பா ளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அடுத்தமாதம் 15-ந்தேதிக்குள்ளும் கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினி யிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஜூலை 15-ந்தேதிக்குள்ளும் சமர்பிக்க வேண்டும்.

    மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் யாதும் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித் தால் போதுமானது. தமிழ்நாட் டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட் டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×