search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தளம் சந்திப்பில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்
    X

    புத்தளம் சந்திப்பில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்

    • கல்லடிவிளையை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜ்குமார் வந்துள்ளார்.
    • ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கன்னியாகுமரி :

    நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் (வயது 50). இவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஹரிகுமார், டேவிட் ஜெயக்குமார் ஆகியோருடன் நேற்று காலை புத்தளம் ஜங்ஷனில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

    அப்போது கல்லடிவிளையை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜ்குமார் வந்துள்ளார். அவர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜை அவதூறாக பேசினா ராம். இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக அங்கு இவரது மகன்கள் அபினேஷ் (21), ஆகாஷ் (20) மற்றும் புத்தளத்தை சேர்ந்த சதீஷ் (43) ஆகியோரும் வந்துள்ள னர். அவர்கள் 4 பேரும் சேர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜை தாக்கியதோடு மிரட்டலும் விடுத்ததாக சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் பேரில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் விஜயகுமார் விசாரணை நடத்தி ராஜ்குமார் உள்பட 4 பேர் மீதும் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதில் ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.படுக்காயம் அடைந்த சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    Next Story
    ×