search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சலில் செல்போன் தர மறுத்த வியாபாரி மீது தாக்குதல்
    X

    குளச்சலில் செல்போன் தர மறுத்த வியாபாரி மீது தாக்குதல்

    • 5 பேருக்கு வலைவீச்சு
    • சிறிது நேரத்தில் 2 பைக்குகளில் வந்த 4 பேர் வில்சனுடன் சேர்ந்து தங்கராஜை கையால் தாக்கினர்.

    கன்னியாகுமரி :

    குளச்சல் மரமடியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 58). இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் வில்சன். தற்போது இவர் ரீத்தாபுரம் பேரூராட்சி ஒற்றப்பனவிளையில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தங்கராஜ் குளச்சல் துறைமுக பழைய பாலம் பகுதியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வில்சன், தங்கராஜிடம் பேசுவதற்கு செல்போன் கேட்டார். செல்போனில் காசு தீர்ந்து போச்சு பேச முடியாது என தங்கராஜ் கூறினார். இதனால் வில்சனுக்கு தங்கராஜ் மீது முன் விரோதம் ஏற்பட்டது. நேற்று மதியம் தங்கராஜ் வழக்கம்போல் துறைமுக பழைய பாலம் பகுதியில் நண்பர் மரிய ஜாணுவுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மீண்டும் வந்த வில்சன் போனில்,அவரது நண்பர்களை செல்போனில் அழைத்தார். பின்னர் சிறிது நேரத்தில் 2 பைக்குகளில் வந்த 4 பேர் வில்சனுடன் சேர்ந்து தங்கராஜை கையால் தாக்கினர்.

    இதை தடுத்த மரிய ஜாணையும் தாக்கி மிரட்டல் விடுத்து சென்றனர். இதில் தங்கராஜிக்கு கன்னங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. தங்கராஜ் குளச்சல் அரசு மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மரிய ஜாண் புற நோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்து குளச்சல் போலீசார் வில்சன் 2 பைக்குகளில் வந்த கண்டால் தெரியும் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×