என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோட்டாரில் கட்டிட காண்ட்ராக்ட் மீது தாக்குதல்
    X

    கோட்டாரில் கட்டிட காண்ட்ராக்ட் மீது தாக்குதல்

    • 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு
    • 5 பேர் மீதும் கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசா ரணை

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சரக்கல் விளை பகுதியைச் சேர்ந்தவர் மதன் (வயது 42), பில்டிங் காண்ட்ராக்டர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று சரக்கல் விலை முத்தாரம்மன் கோவில் பகுதியில் மதன்சென்று கொண்டி ருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த டென் சிங், ராஜா, ராம கிருஷ்ணன், ராஜேஷ், ஞானசேகர் ஆகியோர் தடுத்து நிறுத்தி தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் மதனை சரமாரியாக கம்பாலும் கையாலும் தாக்கினார்கள்.

    இதில் மதன் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக் காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து மதன் கோட்டார் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீ சார் டென்சிங், ராஜா, ராமகிருஷ்ணன், ராஜேஷ், ஞானசேகர் ஆகிய 5 பேர் மீதும் கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×