search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் உணவு நிறுவன ஊழியர் மீது தாக்குதல்
    X

    தனியார் உணவு நிறுவன ஊழியர் மீது தாக்குதல்

    • கணவன்- மனைவி மீது வழக்கு
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழித்துறை :

    மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியை சேர்ந்தவர் வென்ஸ்லாஸ் (வயது 48). இவர் தனியார் உணவு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜோசப் (48), அவரது மனைவி விக்னேஸ்வரி (45) ஆகியோ ருக்கும் வழி பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்ப டுகிறது. இதையடுத்து வென்ஸ்லாஸ் பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது ஜோசப் மற்றும் விக்னேஸ்வரி ஆகியோர் சேர்ந்து அவரை தடுத்து நிறுத்தி தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த வென்ஸ்லாசை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத் துள்ளனர்.

    இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    Next Story
    ×