search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் சந்திப்பு நிலையம் வழியாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் : பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
    X

    பொன்.ராதாகிருஷ்ணன்

    நாகர்கோவில் சந்திப்பு நிலையம் வழியாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் : பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

    • ராமேசுவரம்-கன்னியாகுமரி இடையேயான ரெயில் சேவையை விரைவில் தொடங்க வேண்டும்.
    • பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயனடைவார்கள் என பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

    நாகர்கோவில்:

    ரெயில்வே மத்திய மந்திரி அஸ்வினி வைஸ்னவ்வுக்கு, முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷண்ன் கோரிக்கை மனு ஒன்று அளித்துள்ளார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் இருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம் வழியாக கொல்லம் வரை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படாமல் நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது பொதுமக்களுக்கு கடும் அவதியை ஏற்படுத்தும். எனவே ரெயில்வே நிர்வாகம் குமரி மாவட்ட மக்களின் நலன் கருதி நாகர்கோவில் சத்திப்பு வழியாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்.

    அதேசமயம் ராமேசுவரம்-கன்னியாகுமரி இடையேயான ரெயில் சேவையை விரைவில் தொடங்க வேண்டும். இத்தகைய ரெயில் சேவை மூலம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயனடைவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×