என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த வயதான தம்பதி தரையில் உருண்டதால் பரபரப்பு
- மகன்களிடம் இருந்து சொத்தை மீட்டுதர கோரிக்கை
- தங்களை பராமரிக்காமல் கைவிட்டு விட்டதாகவும் அவர்கள் கூறினர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் மற்ற நாட்களிலும் பொதுமக்கள் மனு அளித்து செல்கிறார்கள். மனு அளிக்க வருபவர்கள் தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருவதை தடுத்து கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பூதப்பாண்டி அருகே நடுவூர் பகுதியை சேர்ந்த வயதான தம்பதியினர் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் தங்களது சொத்தை மகன்கள் எழுதி வாங்கி விட்டதாகவும், அதன் பிறகு தங்களை பராமரிக்காமல் கைவிட்டு விட்டதாகவும் அவர்கள் கூறினர்.
எனவே அந்த சொத்தை மீண்டும் எங்களுக்கு மீட்டு தர வேண்டும் என்று கூறி மனு அளித்தனர். திடீரென அவர்கள் கலெக்டர் அலுவலக பகுதியில் தரையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்