என் மலர்
உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
- எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
- 16-வது வார்டு கவுன்சிலர் நவமணி அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்துள்ளார்.
நாகர்கோவில் :
தமிழகம் முழுவதும் மாற்று கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்து வருகிறார்கள். குமரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகள் பலரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி சாமியை சென்னை யில் சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
ஆரல்வாய்மொழி பேரூராட்சி 16-வது வார்டு கவுன்சிலர் நவமணி மாற்று கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்துள்ளார். குல சேகரபுரம் ஊராட்சி தலைவர் சுடலையாண்டி, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி குழு துணை தலைவர் சண்முகவடிவு ஆகியோரும் அ.தி.மு.க.வில் இணைந்த னர்.
நாகர்கோவில் மாநக ராட்சி 11-வார்டு கவுன்சிலர் ஸ்ரீலிஜா, ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் சிலரும் மரியாதை நிமித்தமாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.






