என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
    X

    குமரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

    • எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
    • 16-வது வார்டு கவுன்சிலர் நவமணி அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்துள்ளார்.

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் மாற்று கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்து வருகிறார்கள். குமரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகள் பலரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி சாமியை சென்னை யில் சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    ஆரல்வாய்மொழி பேரூராட்சி 16-வது வார்டு கவுன்சிலர் நவமணி மாற்று கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்துள்ளார். குல சேகரபுரம் ஊராட்சி தலைவர் சுடலையாண்டி, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி குழு துணை தலைவர் சண்முகவடிவு ஆகியோரும் அ.தி.மு.க.வில் இணைந்த னர்.

    நாகர்கோவில் மாநக ராட்சி 11-வார்டு கவுன்சிலர் ஸ்ரீலிஜா, ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் சிலரும் மரியாதை நிமித்தமாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    அப்போது அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.

    Next Story
    ×